Thursday 2nd of May 2024 01:26:53 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கை வீரர்களின் சிறந்த இணைப்பாட்டமே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் -  ரோஹித் ஷர்மா

இலங்கை வீரர்களின் சிறந்த இணைப்பாட்டமே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் - ரோஹித் ஷர்மா


இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த இணைப்பாட்டமே, நேற்றைய போட்டியில் தமது அணி தோல்வியடைய காரணம் என இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண 'சுப்பர் 4' கிரிக்கெட் போட்டியின் பின்னர், இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த வகையில் செயற்பட்டனர். விக்கெட் இழப்பின்றி 10 ஓவர்களில் இலங்கை அணி 90 ஒட்டங்கள் பெற்றிருந்தது.

நாம், போட்டியை எமது பக்கம் கொண்டுவர முயற்சித்தோம். இருந்தபோதிலும், விக்கெட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தது.

இலங்கை அணியின் டில்சான் மதுசங்க, சிறந்த பந்துவீச்சுத் திறனை வெளிப்படுத்தினார்.

எந்தவொரு அணியையும், குறைத்து மதிப்பிட கூடாது. அனைத்து அணிகளும், சகல போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றும், இலங்கை அணியிடம் சிறந்த ஆட்டத்தை அவதானித்ததாக இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய அணியை 170 என்ற ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தும் பட்சத்தில் போட்டியை வெற்றிக்கொள்ள முடியும் என தாம் எதிர்பார்த்ததாக இலங்கை அணியின் வீரர் பானுக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE